Sunday, August 9, 2015

அப்துல் கலாம் அய்யா...

உண்மை
உணர்த்தும் தலைவர் அவர்.
உள்ளம்
உலுக்கும் மனிதம் அவர்.
கனவை
கரைசேர்க்கும்
கட்டுமரம் கிட்டியது அவரால்.
மகா தீபம் ஒன்று
ஓராயிரம் கோடி தீபங்களை ஏற்றியே அணைந்துள்ளது
அக்கோடி தீபங்கள்
பார் முழுவதும்
பரவும் நாள்
பாத தொலைவில்தான் உள்ளது.
மனதும் கண்களும் கரைய எனது நன்றிகள்
அக்கொடியில் ஒன்றாய்....

அய்யா நின்புகழ் நிலைத்திருக்கும்

உலகம் உறையும்வரை.

No comments: