இத்தனை நாள் இல்லை
இந்த குழப்பம் கலந்த பயம்...
விரும்பியபடி கிடைக்குமா
என்ற குழப்பத்தை விட...
கிடைக்கப்போவது விரும்பும்படி இருக்குமா
என்ற பயம் பெரிது...
எனது எதிர்பார்ப்புகள்
சொற்பமானவையே...
இவைகள் அற்பமாக்கபட்டுவிடும்போதும்,
கேள்விக்குள்ளாகும்போது,
பாதிப்புக்குள்ளாவது நான்மட்டுமல்ல...
ஆனால் இதற்காக,
பயப்படுவது நான்மட்டுமே...
இத்தனை பயங்களும், குழப்பங்களும் மீறிய
களிப்புடன் கலந்த எதிர்பார்ப்பும்,
வருங்காலத்தை செதுக்கும் கற்பனைகளும்,
புதியதே...
புரிதலுக்கும் அரியதே...
வீட்டுமேஜையில் என் ஜாதகத்தை பார்த்தபிறகு...
Saturday, December 17, 2011
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment