Sunday, November 13, 2011

தலைப்பில்லா தருணங்கள் - 1

கல்யாணத்தரகருக்கு கல்யாணம் :
மணப்பெண்ணாக
பலவருடமாய் மாப்பிள்ளை கிடைக்காத பெண்...

பணம் :
அதை நாம் உதாசினப்படுத்தும்போது,
அது நம்மை
வெகுவிரைவில் பழிவாங்கி விடுகிறது...

சொந்தம் :
பல நேரங்களில்
அதன் அளவுகோல் பணமாகவே உள்ளது...


கல்யாணச்சந்தை :
மதிப்பை உயர்த்திக்காட்டும் போட்டி
இரு தரப்பிலும்
பலமாகவே உள்ளது...
இப்போட்டியில் தோற்பது என்னமோ,
இறுதிவரை பார்வையாளராக வேடிக்கை பார்க்கும்
மணமக்களே!!!

No comments: