Tuesday, October 25, 2011

எனக்கு நானே பிரம்மன்!

எனக்கு நானே பிரம்மன்,
இன்னும் படைத்து கொண்டிருக்கிறேன் என்னை...

நினைத்தேன்,
படைத்ததை முடித்தேன் என்று.
முடித்தேன்,
முடித்ததை மாற்றியே படைத்தேன்.
மாற்றினேன்,
மாற்றங்கள் நன்மையே கொடுக்குமென.
தெளிந்தேன்,
மாற்றங்கள் என்கையில் இல்லை.
உணர்ந்தேன்,
அவை இவ்வுலகத்தின் கோரப்பிடியில்.

எனது நாட்காட்டியின் காகிதங்கள்
என்னால் கிழிக்கபடுவதில்லை.

எனது நாட்கள் பிறரால் பறிக்கப்படுகின்றன,
பிறருக்காக எரிக்கப்படுகின்றன.

அவைகளை எனதாக்க முயற்சிக்கின்றேன்
முயன்று அயன்று பயின்று படைக்கின்றேன்.

இன்னும் படைத்து கொண்டிருக்கிறேன் என்னை...
எனக்கு நானே பிரம்மன் (என நினைத்து!)

No comments: